இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தன்னுடைய படங்களுக்கு அயன், கோ, மாற்றான், அனேகன், கவண் என வித்தியாசமான தலைப்புகளை சூட்டுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் கே.வி.ஆனந்த். அவரது இயக்கத்தில் தற்போது ஒரு படத்தில் சூர்யா நடித்து வருகிறார்.
சூர்யாவின் 37 ஆவது படமாக உருவாகி வரும் இந்தப்படத்தில் சாயிஷா கதாநாயகியாக நடிக்கிறார். மோகன்லால், சமுத்திரக்கனி, ஆர்யா, பொம்மன் இரானி உட்பட மேலும் சில பிரபலங்கள் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
'லைகா புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்ற யோசனையில் இருக்கிறார் இயக்குனர் கே.வி.ஆனந்த், மீட்பான், காப்பான், உயிர்கா ஆகிய மூன்று தலைப்புகளை தற்காலிகமாக தேர்வு செய்து அதனை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கே.வி.ஆனந்த், அதில் எதை தேர்வு செய்வது என்று ரசிகர்களிடம் கருத்து கேட்டிருக்கிறார். அதனை தொடர்ந்து ரசிகர்களும் இதில் எந்த தலைப்பு சூர்யா நடிக்கும் படத்திற்கு பொருத்தமாக இருக்கும் என்று வாக்களித்து வருகின்றனர்.
மீட்பான், காப்பான், உயிர்கா ஆகிய மூன்று தலைப்புகளில் 'உயிர்கா' என்ற தலைப்பிற்கு அதிக வாக்குகள் அளித்துள்ளனர். அதனடிப்படையில் இந்த படத்திற்கு 'உயிர்கா' என்ற தலைப்பையே இயக்குனர் கே.வி.ஆனந்த் வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மூன்று தலைப்புகளுக்கும் பொதுவான அர்த்தம் காப்பவன் என்பதுதான்.