தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாள நடிகர் திலீப், கடந்த ஆண்டு நடிகை விவகாரத்தில் சிக்கி சிறை சென்று, ஜாமீனில் வெளிவந்த பின்பு பெரிய அளவில் படங்களை நடிப்பதை குறைத்துக்கொண்டார் என்றே தெரிகிறது. இல்லையெனில் செலக்டிவாக பிரமாண்டமாக படங்களை மட்டும் ஒப்புக்கொண்டு நிதானமாக நடித்து வருகிறாரோ என்றும் தோன்றுகிறது. காரணம் இந்தாண்டு, திலீப் நடிப்பில் கம்மார சம்பவம் என்கிற ஒரே ஒரு படம் மட்டுமே வெளியாகி உள்ளது.
திலீப், சித்தார்த் இணைந்து நடித்த இந்தப்படம் மேக்கிங்கிற்காக பாராட்டப்பட்டாலும் வசூல்ரீதியாக பெரிய வரவேற்பை பெறவில்லை. இதுபோக சவாரி என்கிற மலையாளப்படத்தில் நட்புக்காக சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் திலீப். அதேசமயம் தற்போது தொடர்ந்து மூன்று படங்களில் நடித்து வரும் திலீப், நான்காவதாக ஒரு புதிய படத்தின் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். ஆக, வரும் 2019ஆம் வருடம் திலீப்பிற்கு சுபிட்சமான வருடமாக இருக்கும் என தாராளமாக நம்பலாம்.