கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
மலையாள நடிகர் திலீப், கடந்த ஆண்டு நடிகை விவகாரத்தில் சிக்கி சிறை சென்று, ஜாமீனில் வெளிவந்த பின்பு பெரிய அளவில் படங்களை நடிப்பதை குறைத்துக்கொண்டார் என்றே தெரிகிறது. இல்லையெனில் செலக்டிவாக பிரமாண்டமாக படங்களை மட்டும் ஒப்புக்கொண்டு நிதானமாக நடித்து வருகிறாரோ என்றும் தோன்றுகிறது. காரணம் இந்தாண்டு, திலீப் நடிப்பில் கம்மார சம்பவம் என்கிற ஒரே ஒரு படம் மட்டுமே வெளியாகி உள்ளது.
திலீப், சித்தார்த் இணைந்து நடித்த இந்தப்படம் மேக்கிங்கிற்காக பாராட்டப்பட்டாலும் வசூல்ரீதியாக பெரிய வரவேற்பை பெறவில்லை. இதுபோக சவாரி என்கிற மலையாளப்படத்தில் நட்புக்காக சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் திலீப். அதேசமயம் தற்போது தொடர்ந்து மூன்று படங்களில் நடித்து வரும் திலீப், நான்காவதாக ஒரு புதிய படத்தின் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். ஆக, வரும் 2019ஆம் வருடம் திலீப்பிற்கு சுபிட்சமான வருடமாக இருக்கும் என தாராளமாக நம்பலாம்.