‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
மலையாள நடிகர் திலீப், கடந்த ஆண்டு நடிகை விவகாரத்தில் சிக்கி சிறை சென்று, ஜாமீனில் வெளிவந்த பின்பு பெரிய அளவில் படங்களை நடிப்பதை குறைத்துக்கொண்டார் என்றே தெரிகிறது. இல்லையெனில் செலக்டிவாக பிரமாண்டமாக படங்களை மட்டும் ஒப்புக்கொண்டு நிதானமாக நடித்து வருகிறாரோ என்றும் தோன்றுகிறது. காரணம் இந்தாண்டு, திலீப் நடிப்பில் கம்மார சம்பவம் என்கிற ஒரே ஒரு படம் மட்டுமே வெளியாகி உள்ளது.
திலீப், சித்தார்த் இணைந்து நடித்த இந்தப்படம் மேக்கிங்கிற்காக பாராட்டப்பட்டாலும் வசூல்ரீதியாக பெரிய வரவேற்பை பெறவில்லை. இதுபோக சவாரி என்கிற மலையாளப்படத்தில் நட்புக்காக சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் திலீப். அதேசமயம் தற்போது தொடர்ந்து மூன்று படங்களில் நடித்து வரும் திலீப், நான்காவதாக ஒரு புதிய படத்தின் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். ஆக, வரும் 2019ஆம் வருடம் திலீப்பிற்கு சுபிட்சமான வருடமாக இருக்கும் என தாராளமாக நம்பலாம்.