வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
தேசிய விருது பெற்ற பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பால். இவர், மும்பையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்திடம் ஒரு கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அதனை 90 நாட்களில் திருப்பித் தந்து விடுவதாகவும், 12 சதவிகித வட்டி தருவதாகவும் ஒப்புதல் அளித்திருப்பதோடு வட்டியுடன் சேர்ந்த தொகைக்கு காசோலையும் அளித்துள்ளார்.
கடனுக்கான காலக்கெடு முடிந்ததும், அந்த நிறுவனம் அர்ஜுன் ராம்பால் கொடுத்த காசோலையை வங்கியில் செலுத்தியது. ஆனால், பணமில்லை என்று காசோலை திரும்பி வந்தது. இதனால், அந்த நிறுவனம் அர்ஜுன் ராம்பால் மீது பணமோசடி வழக்கு தொடர்ந்துள்ளது. இதனால் நேற்று அவர் கைது செய்யப்படலாம் என்கிற சூழ்நிலை ஏற்பட்டு, பரபரப்பு கிளம்பியது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெண் தயாரிப்பாளர் பிரான் அரோரோ இதுபோன்ற வழக்கில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது,