ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் சமீபத்தில் நடந்த பிரச்சினைகள் குறித்தும், அதற்கு காரணமானவர்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அத்துடன் இளையராஜா இசை நிகழ்ச்சியை எப்படி நடத்துவது என்பது குறித்தும் பேசப்பட்டது. கூட்டத்தில் சங்கத்தின் துணைத் தலைவராக பார்த்திபன் தேர்வு செய்யப்பட்டார். இதுகுறித்து சங்கத்தின் தலைவர் விஷால் கூறியதாவது:
ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டதைத் தயாரிப்பாளர்கள் சங்கம் வரவேற்கிறது. இதனால், டிக்கெட் விலை குறையும். எனவே, திரையரங்குகளுக்கு மக்கள் அதிக அளவில் வருவார்கள். இது தயாரிப்பாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் இளையராஜா நிகழ்ச்சியை எப்படி நடத்துவது, எவ்வாறு நடத்துவது என்பது குறித்து இந்த செயற்குழுவில் விவாதிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க அனுமதி கேட்டுள்ளோம். விரைவில் அவரைச் சந்திப்போம்.
தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழுவை எப்போது கூட்டலாம் என்பது குறித்து அடுத்த செயற்குழுவில் முடிவு எடுக்கப்படும். தற்போது துணைத்தலைவராக இருக்கும் கவுதம் மேனனுக்கு பதில் பார்த்திபன் துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தயாரிப்பாளர் சங்கத்துக்குப் பூட்டு போட்ட பிரச்சினையில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உள்ளோம். சம்பவம் நடந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ எங்களிடம் உள்ளது. அந்த வீடியோவில் உள்ள அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்புவதோடு, தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினர்கள் இல்லாத யாராவது வீடியோவில் இருந்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்
இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.