ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் அரவிந்த்சாமி, சினிமாவில் முக்கியத்துவத்தோடு இருந்தவர், திடீரென சினிமாவை விட்டு விலகிச் சென்றார். தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்து மீண்டும் பிரபலமானார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அவர், தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் குறித்து பேசியிருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது : நடிப்பது தான் என்னுடைய ஆசையாக இருந்தது. அதனால் தன் சினிமாவுக்கே வந்தேன். ஆனால், பெரிய ஸ்டார் ஆவேன் என்று ஒரு நாளும் நினைத்ததில்லை. அப்படியொரு நிலையை அடைய வேண்டும் என்ற விருப்பமும் இருந்ததில்லை. ஸ்டார் ஆனதால், என்னுடைய பிரைவசி பறிபோனது. அதனால்தான், போதும் என்று சினிமாவை விட்டு விலகினேன்.
அமெரிக்காவுக்கு சென்றேன். மாஸ்டர் படித்தேன். பின், தொழில் தொடங்கினேன். அந்த தொழில் பல நாடுகளிலும் வெற்றிகரமாகவே நடந்தது. ஆனாலும், ஒரு கட்டத்தில், அதையும் 2005ல் விட்டு விட்டேன். என் குழந்தைகள் தனியாக வளர வேண்டிய சூழல் இருந்ததால், அதை உடைத்து, அவர்களோடு இணைந்து வாழ்க்கையைத் தொடர்ந்தேன்.
சினிமாவுக்கு திரும்பவும் வர வேண்டும் என்ற எண்ணம், அப்போதும் கூட எனக்கு இல்லை. திடுமென கடல் படத்தில் நடிக்க வேண்டும் என்று மணிரத்னம் என்னை கூப்பிட்டார். மறுக்க முடியவில்லை. நடித்தேன். இருந்தாலும், படம் சரியாக போகவில்லை. தோல்வியை ஏற்க முடியவில்லை. கூடவே, இப்படியொரு தோல்வியோடு என்னுடைய வாழ்க்கை முடிந்துவிடக் கூடாது என்றும் நினைத்தேன். அதனால்தான், தொடர்ந்து நடிக்க முடிவெடுத்து, படங்களை வரிசையாக ஒப்புக் கொண்டு, நடிக்கத் துவங்கினேன்.
இவ்வாறு அரவிந்த்சாமி கூறியுள்ளார்.