டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கடந்தாண்டு ஆதி என்கிற சூப்பர் ஹிட் படத்தின் மூலம் மலையாள சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான பிரணவ் மோகன்லால், தற்போது தனது இரண்டாவது படமான 'இருபத்தியொன்னாம் நூற்றாண்டு' படப்பிடிப்பை முடித்துவிட்டார். திலீப்பை வைத்து ராம்லீலா என்கிற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் அருண்கோபி இயக்கியுள்ளார். படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் தற்போது டப்பிங் பணிகள் துவங்கியுள்ளன.
பிரணவின் முதல்படமான 'ஆதி' கடந்தாண்டு ஜனவரி 26ல் வெளியாகி வெற்றி பெற்றது போல, இந்தப் படத்தையும் சென்டிமென்டாக வரும் ஜனவரி-26ல் வெளியிட இறுதிக்கட்ட பணிகளை துரிதமாக நடத்தி வருகிறார்கள். புலிமுருகன் பட தயாரிப்பாளர் தயாரித்துள்ள, இந்தப் படத்தில் பீட்டர் ஹெய்ன் ஆக்சன் இயக்குனராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.