தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தொழில் இடத்திலும், வெளியேயும் தங்களுக்கு இருந்த பாலியல் தொந்தரவுகள் குறித்து மீ டூ மூலம் வெளிப்படுத்தலாம் என்ற கலாசாரம் வேகமாக பரவியதும், வி.ஐ.பி., பெண்கள் பலரும் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல்கள் குறித்து வெளிப்படுத்தி வருகின்றனர். அதனால், ஏற்படும் அடுத்தடுத்த துன்பங்களையும் வெளிப்படுத்துகின்றனர்.
அந்த வகையில், தனக்கேற்பட்ட பாலியல் சீண்டல்கள் குறித்து நடிகை அதிதி ராவ் ஹிதாரியும் மீ டூவில் பகிர்ந்திருந்தார். இப்போது, அந்த சமயத்தில் தனக்கு நேர்ந்தவைகள் குறித்து விலாவரியாக பகிர்ந்திருக்கிறார். தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அதிதி. இது குறித்து அவர் கூறியதாவது:
திரைத்துறையில் துவக்க காலங்களில் எனக்கும் பாலியல் சீண்டல்கள் ரொம்பவே இருந்தன. இதுவா... அதுவா... எனக்கு இரு சாய்ஸ்களை கொடுத்தனர். அவர்களுடைய எதிர்பார்ப்புக்கு இசையவில்லை என்றதும், எனக்கு தண்டனை வழங்கினர். எட்டு மாதங்களுக்கு எனக்கு பட வாய்ப்பு பறிபோனது; வீட்டில் முடங்கினேன். அதற்காக நான் பெரிதாக வருந்தவில்லை. அதற்குக் காரணம், என்னுடைய முடிவுதான் சரி என, என்னை என்னுடைய மேனேஜர், குடும்பத்தினர், நண்பர்கள் என எல்லோரும் எனக்கு பக்க பலமாக இருந்தனர்.
இந்த விஷயத்தில், பெண்களிடம் நான் கேட்டுக் கொள்வதெல்லாம், தொழில் இடங்களில் உங்களுக்கு ஏற்படும் பாலியல் சீண்டல்கள் குறித்து, நீங்கள் அமைதியாக இருந்து விட்டால், அது, சீண்டல்களை நடத்துபவர்களுக்கு ஆதரவாகி விடும். குறைந்தபட்சம், தன்னுடைய நிலை குறித்து, பெற்றோர், நண்பர்களிடம் கூறிவிட வேண்டும். பொது இடங்களிலும் தைரியமாக வெளிப்படுத்த வேண்டும். தற்போது மீ டூ வந்திருக்கிறது. அதன் மூலமும் தைரியமாக வெளியில் சொல்லலாம். அப்படி செய்யும்போது, கண்டிப்பாக பெண்களுக்கு நியாயம் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.