'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரியைத் தொடர்ந்து தனுஷ் நடித்து நேற்று வெளியாகியுள்ள படம் மாரி-2. இந்த படத்தில் தனுசுடன் சாய் பல்லவி, வரலட்சுமி, டொவினோ தாமஸ், ரோபோ சங்கர் என பலர் நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ள மாரி-2 படம் வெளியாவதற்கு முன்பே இணையதளங்களில் படத்தை வெளியிட தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதை விசாரித்த நீதிபதியும் சட்டவிரோதமாக மாரி-2 படத்தை இணையதளங்களில் வெளியிட தடை விதித்தார்.
இருப்பினும், நேற்று மாரி-2 படம் வெளியானதும் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட பைரசி இணையதளங்களில் வெளியாகியிருக்கிறது. இதனால் மாரி-2 படத்தின் தயாரிப்பாளரும், ஹீரோவுமான தனுஷ் அதிர்ச்சியடைந்துள்ளார்.