ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி |
பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரியைத் தொடர்ந்து தனுஷ் நடித்து நேற்று வெளியாகியுள்ள படம் மாரி-2. இந்த படத்தில் தனுசுடன் சாய் பல்லவி, வரலட்சுமி, டொவினோ தாமஸ், ரோபோ சங்கர் என பலர் நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ள மாரி-2 படம் வெளியாவதற்கு முன்பே இணையதளங்களில் படத்தை வெளியிட தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதை விசாரித்த நீதிபதியும் சட்டவிரோதமாக மாரி-2 படத்தை இணையதளங்களில் வெளியிட தடை விதித்தார்.
இருப்பினும், நேற்று மாரி-2 படம் வெளியானதும் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட பைரசி இணையதளங்களில் வெளியாகியிருக்கிறது. இதனால் மாரி-2 படத்தின் தயாரிப்பாளரும், ஹீரோவுமான தனுஷ் அதிர்ச்சியடைந்துள்ளார்.