சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரியைத் தொடர்ந்து தனுஷ் நடித்து நேற்று வெளியாகியுள்ள படம் மாரி-2. இந்த படத்தில் தனுசுடன் சாய் பல்லவி, வரலட்சுமி, டொவினோ தாமஸ், ரோபோ சங்கர் என பலர் நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ள மாரி-2 படம் வெளியாவதற்கு முன்பே இணையதளங்களில் படத்தை வெளியிட தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதை விசாரித்த நீதிபதியும் சட்டவிரோதமாக மாரி-2 படத்தை இணையதளங்களில் வெளியிட தடை விதித்தார்.
இருப்பினும், நேற்று மாரி-2 படம் வெளியானதும் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட பைரசி இணையதளங்களில் வெளியாகியிருக்கிறது. இதனால் மாரி-2 படத்தின் தயாரிப்பாளரும், ஹீரோவுமான தனுஷ் அதிர்ச்சியடைந்துள்ளார்.