ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
'துப்பாக்கி முனை' படத்தை அடுத்து 'மஹா' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை ஹன்சிகா. கொஞ்ச காலம் அமைதியாக பட வாய்ப்புகள் இன்றி இருந்த ஹன்சிகா, தற்போது மீண்டும் பிசியாகி இருக்கிறார். அது குறித்தும், தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்தும் ஹன்சிகா கூறியிருப்பதாவது:
நான் அடிப்படையில் புத்த மத கொள்கைகளில் தீவிர ஆர்வமும்; ஈடுபாடும் உடையவள். அமைதி, அன்பு, காதல் மட்டுமே உலகத்தில் இருக்கணும்னு விரும்புகிறேன். நிறைய பணம் சம்பாதிக்கிறேன். வாழ்க்கைப் பாடங்களை பணம் தான் எல்லோருக்கும் கற்றுத் தருகிறது. வாழ்க்கையில், சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை இல்லாதவர்களுக்கு உதவிகள் செய்ய பயன்படுத்த வேண்டும் என, முடிவெடுத்துள்ளேன். அதற்காக மும்பையில், முதியோர் இல்லம் கட்ட ஏற்பாடு செய்து வருகிறேன்.
ஹன்சிகா, நல்ல நிலைக்கு வந்து விட்டார் என்றால், அதற்குக் காரணம் தமிழ் சினிமா ரசிகர்கள் எனக்குக் கொடுத்த வரவேற்புதான். குறைவான படங்களில் நான் நடிக்கறதுக்குக் காரணம், இடையில் கொஞ்ச காலம், நானே விரும்பி பிரேக் எடுத்துக் கொண்டது தான். மற்ற மொழிகளில் நடிப்பதைவிட, தமிழில் நடிப்பதுதான் எனக்கு பிடித்தமாக உள்ளது. தமிழ் நடிகைன்னு சொல்றதுதான் எனக்குப் பெருமை.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.