ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விஜய் சேதுபதியின் 25வது படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம் சீதக்காதி. இதில் அவர் 87 வயது முதியவராக நடித்திருப்பதால் இன்னும் ஆர்வம் அதிகமா இருந்தது. ஆனால் படம் வெளிவந்த பிறகு அதில் விஜய்சேதுபதி முதல் 40 நிமிடம் மட்டுமே நடித்திருப்பது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து விஜய் சேதுபதி ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருக்கிறார் அதில் அவர் கூறியிருப்பதாவது:
பொதுவாக ஒரு கலைஞன் தனக்கு ஏற்படும் எண்ணத்தை கலையின் மூலமாகத்தான் சொல்வான் என்பார்கள். அப்படி நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரனோட நன்றிக் கடன் தான் சீதக்காதி படம். வாய்ப்பு கொடுத்த பாலாஜி தரணிதரனுக்கு நன்றி.
இந்தப் படத்தில் முதல் 40 நிமிடம் தான் வருவேன். அப்படி இருந்தும் ஏன் இதனை எனது 25வது படம், என்னுடைய படம் என்பதற்கு காரணம் அதில் நான் நடித்துள்ள அய்யா கேரக்டர். அய்யாவின் கலை, ஆன்மா பற்றிய படம். எல்லோரும் தியேட்டருக்கு வந்து படம் பார்த்து ஆதரவு கொடுங்க. உலகத்தில் எங்கேயோ இருக்கிற உங்களையும், எங்கேயோ இருக்கிற என்னையும் இணைக்கிற கலைக்கு நன்றி.