ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான விஷால் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ள தயாரிப்பாளர்கள் சிலர், தி.நகரில் உள்ள சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்டனர். இதை உடைக்க விஷால் சங்க அலுவலகத்திற்கு வந்தபோது போலீசார் அவரை தடுத்தி நிறுத்தினர். தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டார்.
இதனிடையே சங்கத்திற்கு பூட்டு போட்ட தயாரிப்பாளர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, சங்கத்தை காப்பாற்றுங்கள் என்று கோரிக்கை மனுவை வைத்தனர். முதல்வரும் நடவடிக்கை எடுப்பதாக கோரிக்கை வைத்திருக்கிறார்.
தொடர்ந்து தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பிரச்னை உருவாகி இருப்பதால் இதை தீர்க்கும் வரை யாரும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நுழையாத வண்ணம், திநகரில் உள்ள சங்க அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கிண்டி வருவாய் துறை வட்டாச்சியர் ராம்குமார் தலைமையிலான அலுவலர்கள் இதை மேற்கொண்டனர்.