இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
பாகுபலி படம் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். தற்போது சாஹோ படத்தை முடித்துவிட்டு, அடுத்தப்படியாக ஒரு படத்தில் நடிக்க தயாராகிவிட்டார். இந்நிலையில், பிரபாஸின் கெஸ்ட் ஹவுஸ் ஒன்று தெலுங்கானா மாநிலம் ராயதுர்கா பகரில் உள்ளது. 84 ஏக்கரில் அமைந்துள்ள இந்த வீடு, அரசு நிலத்துக்கு சொந்தமான இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான வழக்கில் பிரபாஸிற்கு எதிராக தீர்ப்பு வந்துள்ளது. இதையடுத்து, தெலுங்கானா அரசு அதிகாரிகள், பிரபாஸ் வீட்டை பூட்டி சீல் வைத்தனர். விரைவில் இடிக்கப்போவதாகவும் அறிவித்துள்ளனர். இது திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.