தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடந்த ஆண்டு கேரளாவில் முன்னணி நடிகை ஒருவர் கடத்தப்பட்டு, பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் முன்னணி நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் தான் வேண்டும் என்றே சேர்க்கப்பட்டிருப்பதாகவும், தனக்கு எதிரான ஆதாரங்களை போலீசார் செயற்கையாக உருவாக்கி இருப்பதாவும், கேரள போலீஸ் விசாரணையின் தனக்கு நியாயம் கிடைக்காது என்பதாலும் வழக்கை சி.பி.ஜக்கு மாற்ற வேண்டும் என்று திலீப், கேரள உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை நீதிபதி தாமஸ் தலைமையிலான பெஞ்ச விசாரித்து வழக்கை சி.பி.ஐக்கு மாற்றத் தேவையில்லை என்று மனுவை தள்ளுபடி செய்தது. நீதிமன்றம் தனது தீர்ப்பில், "போலீஸ் விசாரணை சரியாக சென்று கொண்டிருக்கிறது. போலீசாரின் நடவடிக்கைகள் நீதிமன்றத்திற்கு திருப்தி அளிக்கிறது. எனவே இந்த வழக்கை சி.பி.ஐக்க மாற்றத் தேவையில்லை" என்று குறிப்பிட்டுள்ளது.