நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
கடந்த ஆண்டு கேரளாவில் முன்னணி நடிகை ஒருவர் கடத்தப்பட்டு, பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் முன்னணி நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் தான் வேண்டும் என்றே சேர்க்கப்பட்டிருப்பதாகவும், தனக்கு எதிரான ஆதாரங்களை போலீசார் செயற்கையாக உருவாக்கி இருப்பதாவும், கேரள போலீஸ் விசாரணையின் தனக்கு நியாயம் கிடைக்காது என்பதாலும் வழக்கை சி.பி.ஜக்கு மாற்ற வேண்டும் என்று திலீப், கேரள உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை நீதிபதி தாமஸ் தலைமையிலான பெஞ்ச விசாரித்து வழக்கை சி.பி.ஐக்கு மாற்றத் தேவையில்லை என்று மனுவை தள்ளுபடி செய்தது. நீதிமன்றம் தனது தீர்ப்பில், "போலீஸ் விசாரணை சரியாக சென்று கொண்டிருக்கிறது. போலீசாரின் நடவடிக்கைகள் நீதிமன்றத்திற்கு திருப்தி அளிக்கிறது. எனவே இந்த வழக்கை சி.பி.ஐக்க மாற்றத் தேவையில்லை" என்று குறிப்பிட்டுள்ளது.