ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
கடந்த ஆண்டு கேரளாவில் முன்னணி நடிகை ஒருவர் கடத்தப்பட்டு, பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் முன்னணி நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் தான் வேண்டும் என்றே சேர்க்கப்பட்டிருப்பதாகவும், தனக்கு எதிரான ஆதாரங்களை போலீசார் செயற்கையாக உருவாக்கி இருப்பதாவும், கேரள போலீஸ் விசாரணையின் தனக்கு நியாயம் கிடைக்காது என்பதாலும் வழக்கை சி.பி.ஜக்கு மாற்ற வேண்டும் என்று திலீப், கேரள உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை நீதிபதி தாமஸ் தலைமையிலான பெஞ்ச விசாரித்து வழக்கை சி.பி.ஐக்கு மாற்றத் தேவையில்லை என்று மனுவை தள்ளுபடி செய்தது. நீதிமன்றம் தனது தீர்ப்பில், "போலீஸ் விசாரணை சரியாக சென்று கொண்டிருக்கிறது. போலீசாரின் நடவடிக்கைகள் நீதிமன்றத்திற்கு திருப்தி அளிக்கிறது. எனவே இந்த வழக்கை சி.பி.ஐக்க மாற்றத் தேவையில்லை" என்று குறிப்பிட்டுள்ளது.