துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் |
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக எடுக்கப் போகிறோம் என்று பலரும் முன் வந்திருக்கிறார்கள். பிரியதர்ஷினி என்ற பெண் இயக்குனர், ஐயர்ன் லேடி என்ற பெயரில் படம் இயக்கப்போவதாக அறிவித்து, அதன் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். அதில் நித்யா மேனன் ஜெயலலிதாவாக நடிக்கிறார். இதற்கிடையில் இயக்குனர் ஏ.எல்.விஜய் ஜெயலலிதா வாழ்க்கையை அம்மா என்றால் அன்பு என்ற தலைப்பில் படம் எடுக்கப்போவதாகவும், அதில் ஜெயலலிதா கேரக்டரில் வித்யாபாலன் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளது.
இந்த நிலையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தொலைக்காட்சி தொடராக, கவுதம் மேனன் இயக்கப்போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஒரு திரைப்படத்தின் தரத்தில் 30 எபிசோட்களாக இந்த தொடர் தயாராக இருக்கிறதாம். ஒவ்வொரு எபிசோடும் ஒரு மணி நேரம் கொண்டதாக இருக்குமாம். இதில் ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்க இருக்கிறாராம்.
இது தொடர்பாக கவுதம் மேனனுக்கும், அதை தயாரிக்க இருக்கும் சேனலுக்கும் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருப்பதாக தெரிகிறது. சுமார் 25 கோடி ரூபாய் செலவில் இந்த தொடரை தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முறையான அறிவிப்பு சில வாரங்களில் வெளிவரலாம் என்று தெரிகிறது.