'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு நிதி திரட்டுவதற்காக இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளனர். இசைத்துறையில் தொடர்ந்து பல ஆண்டுகளாக சாதனை படைத்து வரும் இளையராஜாவை, கவுரவிக்கும் விதமாகவும், தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு நிதி திரட்டுவதற்காகவும் 'இசையராஜா-75' என்ற நிகழ்ச்சியை நடத்துகிறது தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்.
மிகப் பிரம்மாண்டமானமுறையில் நடத்த இருக்கும் இந்த விழா, வருகிற பிப்ரவரி மாதம் 2, 3ஆம் தேதிகளில் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. (YMCA) மைதானத்தில் நடைபெறவுள்ளது. தமிழ் தெலுக்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளை சார்ந்த சினிமா பிரபலங்களும் கலந்து கொள்கின்றனர்.
இதன்காரணமாக பிப்ரவரி 2, 3 ஆகிய தேதிகளில் எந்த படப்பிடிப்பு வேலைகளும் நடைபெறாது என்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பைக் கேட்டு கடும் கோபத்தில் இருக்கிறாராம் சிம்பு.
பிப்ரவரி 3 ஆம் தேதி சிம்புவின் பிறந்தநாள். அன்றைய தினத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ள மாநாடு படத்தின் துவக்கவிழாவை நடத்த திட்டமிட்டு வைத்திருந்தனர். இளையராஜா இசைநிகழ்ச்சியை காரணம் காட்டி அன்றைக்கு படப்பிடிப்பு நடைபெறாது என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது சிம்புவை அப்செட்டாக்கி உள்ளது.