தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தயாரிப்பாளர் சங்க தலைவராக இருக்கும் விஷாலை கண்டித்து, தயாரிப்பாளர்கள் சிலர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதோடு, சங்க அலுவலகத்திற்கும் பூட்டு போட்டனர். விஷால், உடனடியாக பதவி விலக வேண்டும் என போர்க்கொடி தூக்கி உள்ளனர். இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை வைத்து பணம் சம்பாதிக்க பார்க்கிறார், சங்க நிதியான ரூ.7.80 கோடியை முறைகேடு செய்துள்ளார் உள்ளிட்ட அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அவர் மீது சுமத்தி வருகின்றனர் தயாரிப்பாளர்கள் சிலர்.
இந்நிலையில் இதுப்பற்றி விஷால் கூறியிருப்பதாவது : எந்த முறைகேடும் நடைபெறவில்லை. தயாரிப்பாளர்கள் சங்க கணக்கு விபரங்கள் பொதுக்குழுவில் சமர்பிக்கப்படும். போராட்டம் நடத்துபவர்கள் அனைவரும் ஏற்கனவே பொதுக்குழுவில் பிரச்னை செய்தவர்கள் தான்.
இளையராஜாவை கவுரவிக்கும் நிகழ்ச்சியை நடத்தவிடாமல் செய்வதே அவர்களின் நோக்கம். திட்டமிட்டப்படி அந்த நிகழ்ச்சி நடக்கும், இளையராஜாவை கவுரவிப்போம். அதன்மூலம் உறுப்பினர்களுக்கு கண்டிப்பாக நிலம் வாங்கி தருவோம் என கூறியுள்ளார்.