டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாகுபலி படங்களின் வெற்றியை தொடர்ந்து, ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் என இரண்டு முன்னணி ஹீரோக்களை ஒன்றிணைத்து, மீண்டும் ஒரு பிரமாண்டம் காட்ட தயாராகி விட்டார் இயக்குனர் ராஜமௌலி. முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஜனவரி 19-ம் தேதி துவங்குகிறது.
தற்போது இந்த படத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ராம்சரணின் மாமாவாக சமுத்திரக்கனி நடிக்கிறாராம். இரண்டாம்கட்ட படப்பிடிப்பில் சமுத்திரக்கனி கலந்து கொள்வார் என சொல்லப்படுகிறது. தெலுங்கில் சமுத்திரக்கனி நடிக்கவுள்ள முதல் நேரடி படமும் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.