'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
'செக்கச் சிவந்த வானம்' வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பிரபல நாவல் ஒன்றின் கதையை கருவாக வைத்து, புதிய படம் தயாரிக்கும் பணியில், இயக்குநர் மணிரத்னம் இறங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே திட்டமிட்டு, ஏதோ ஒரு காரணத்தால் தள்ளிக் கொண்டே போன 'பொன்னியின் செல்வன்' கதையையே மீண்டும் மணிரத்னம் கையில் எடுத்திருக்கிறார். இந்தப் படத்தில் நடிகர்கள் விக்ரம், சிம்பு, ஜெயம் ரவி ஆகியோரை நடிக்க வைக்கவும் திட்டமிட்டிருக்கும் மணிரத்னம், அவர்கள் படத்தில் நடிப்பதற்கு முன், சம்பந்தப்பட்ட கேரக்டர்களில் நன்கு தயாராக வேண்டும் என்பதால், ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பொன்னியின் செல்வன் கதையை அனுப்பி படிக்கச் சொல்லி இருக்கிறார்.
பிரம்மாண்டமாக தயாராக இருக்கும் இந்தப் படத்தை, அடுத்தாண்டு துவக்கத்தில் இருந்து துவங்கவும் மணிரத்னம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.