Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

படங்களில் ஆபாசம் தேவையில்லை : ஜெயம் ரவி

18 டிச, 2018 - 19:06 IST
எழுத்தின் அளவு:
No-needs-more-glamour-to-cinema-says-Jayam-ravi

வரும் 21ல் ரிலீசாக இருக்கும் 'அடங்க மறு' படத்தைத் தொடர்ந்து 'தனி ஒருவன்-2' படத்தில் நடிக்க திட்டமிட்டிருக்கிறார் நடிகர் ஜெயம் ரவி. அதற்கான பணிகளில் தீவிரமாக இருக்கும் நடிகர் ஜெயம் ரவி, அவ்வப்போது தனியார் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார். அப்படி கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பார்வையாளர்கள் பல்வேறு கேள்விகளை ஜெயம் ரவியிடம் எழுப்பினர். அப்போது ஜெயம் ரவி அளித்த பதில்களின் தொகுப்பு:

எனக்கு எம்.ஜி.ஆர்., என்றால் ரொம்பவும் பிடிக்கும். இப்போதைக்கு அவரது வரலாற்றை யாராவது படமாக்க முயன்றால், அதில், எம்.ஜி.ஆராக நடிக்க நான் தயாராக இருக்கிறேன். எனது முதல் படத்தில் என்னோடு நடித்த நடிகை சதாவை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அதேபோல, நடிகைகள் ஜெனிலியா, அசின், ஸ்ரேயா என பல நடிகைகளும் எனக்கு பிடித்தவர்கள்தான்.

நான் எப்போது ஓட்டுப் போடத் துவங்கி விட்டேனோ, அன்றிலிருந்தே நானும் அரசியலில் களம் இறங்கி விட்டேன் என்றுதான் அர்த்தம். நேரடியாகத்தான் அரசியலில் களம் இறங்க வேண்டும் என்பதில்லை. அரசியலில் நேரடியாக களம் இறங்கித்தான் மக்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும் என்பதெல்லாம் கிடையாது. கமலோடு சேர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்; அதற்கான வாய்ப்பு கிட்டவில்லை.

சினிமாவைப் பொறுத்த வரையில், படம் எடுத்து முடிக்கும் வரையில் சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும். சில நேரங்களில் போட்ட பட்ஜெட்டைத் தாண்டி செலவு போய்விடும். அப்போது, ரிலீசுக்குக் கூட கஷ்டப்படுவார்கள். அந்த நேரங்களில் பேசிய சம்பளத்தை குறைத்து வாங்கி, படம் ரிலீசாக உதவிகள் செய்திருக்கிறேன். சினிமாவைப் பொறுத்த வரையில், குடும்பத்தோடு தியேட்டர்களுக்கு வந்து படம் பார்க்கிறவர்கள் ரொம்ப ரொம்ப முக்கியம். அதனால், அவர்கள் முகம் சுளிக்காத அளவுக்கு ஆபாசமான காட்சிகளை படத்தில் வைக்காமல் இருப்பது, வியாபார ரீதியில் முக்கியமான ஒன்று.

இவ்வாறு நடிகர் ஜெயம் ரவி பதில் கூறினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in