ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சென்னை : நடிகர் ரஜினிகாந்த்தின் சம்பந்தியும், இயக்குநருமான கஸ்தூரி ராஜா, சினிமா பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ராவிடம் கடன் பெற்றார். இதற்காக கஸ்தூரி ராஜா, அளித்த செக், வங்கியில் பணமின்றி திரும்பி வந்தது. இதனால் போத்ரா, செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். கஸ்தூரிராஜா வாங்கிய கடனுக்கு நடிகர் ரஜினிகாந்த் உத்தரவாதம் கொடுத்தார். அதனால் கடன் கொடுத்தேன் என்று கூறியிருந்தார் போத்ரா.
இதையடுத்து ரஜினி, போத்ரா தன்னிடம் பணம் பறிக்கவே இப்படியொரு வழக்கை பதிவு செய்திருப்பதாக கூறினார். இதனால் ரஜினி மீது சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் போத்ரா.
இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு செய்தார் ரஜினி. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி ஆனந்த் வெங்கடேசன், ரஜினி மீது போத்ரா தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.