மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் |
கஜா புயலினால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி மக்களை சந்தித்து ஆறுதல் மற்றும் நிவாரணங்களை வழங்கிய நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன், மூன்றாம் கட்டமாக கொடைக்கானலில் பாதிப்படைந்த பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
கொடைக்கானில், குருசரடி, பெருமாள் மலை, கோரன் கொம்பு, மங்களக்கொம்பு, குரங்கனிப்பாறை, கடைசிக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகனம் மூலமும், சில இடங்களில் நடந்து சென்றும் பார்வையிட்டு, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். பல ஊர்களில் நிவாரணமும் வழங்கினார்.
செய்தியாளர்களிடம் பேசிய கமல், எங்கள் கொள்கையே சென்ட்ரிசம், மக்களுக்கு எது நல்லது, எது நியாயம் என்று படுகிறதோ அதை நோக்கி நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். அது மட்டும் தான் எங்களுடையே ஒரே கொள்கை. மக்களின் பிரச்சனைகளை மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கும். மக்களின் பிரச்னைகள் மிக முக்கியமானதாக இருக்கிறது. கருணாநிதிக்கு மரியாதை செலுத்துவதற்கு எனக்கு இன்னும் நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் என்றார்.