'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாரம்பரிய நெல் விதைகளைக் காப்பாற்றியவர் திருத்துரைப்பூண்டி, கட்டிமேட்டைச் சேர்ந்த நெல் ஜெயராமன். அவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு, சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார். பலனின்றி சமீபத்தில் மரணம் அடைந்தார்.
நெல் ஜெயராமன் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருந்தபோது, அதை கேள்வி பட்டு, அவரை நேரில் சந்தித்து, ஆறுதல் தெரிவித்ததோடு நிதி உதவியும் செய்தவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
விவசாயிகள் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கும் சிவகார்த்திகேயன், கனா என்ற பெயரில் தான் தயாரிக்கும் புதிய படத்தில் விவசாயி ஒருவரை பெருமைப்படுத்தும் விதத்தில் காட்சிகளை அமைத்திருக்கிறார். முருகேசன் என்று அந்த கேரக்டருக்கு பெயரிடப்பட்டுள்ளது. விவசாயி கேரக்டரான அந்த கேரக்டரில் நடிகர் சத்யராஜ் நடித்துள்ளார்.