பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ் சினிமாவின் முதல் பிரம்மாண்டமான திரைப்படம் என்ற பெயரைப் பெற்ற '2.0' படம் கடந்த நவம்பர் 29ம் தேதி வெளியானது. பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் இந்தப் படம் வெளியாகாததால் தமிழ்நாட்டில் எதிர்பார்த்த வசூலைப் பெற முடியவில்லை. ஹிந்தியில் மட்டுமே இந்தப் படம் 200 கோடி ரூபாய் வசூலைப் பெற்று சாதனை புரிந்துள்ளது.
தெலுங்கிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், படம் வாங்கப்பட்ட விலை அதிகம் என்பதால் ஒரு ஏரியாவைத் தவிர மற்ற ஏரியாக்களில் நஷ்டம் வரும் என்கிறார்கள். 72 கோடி ரூபாய் கொடுத்து வாங்கப்பட்ட இந்தப் படம் இதுவரையில் 52 கோடி ரூபாயை ஷேர் ஆகத் தந்துள்ளது. 72 கோடி ரூபாயை வசூலிக்க இன்னும் 20 கோடி தேவை. ஆனால், மூன்று வாரங்கள் ஆகிவிட்டதால் படத்தின் வசூல் தற்போது குறைந்துவிட்டது. அதனால், பாக்கித் தொகையான 20 கோடி வசூலிக்க வாய்ப்பில்லை.
தெலுங்கின் முக்கிய ஏரியாவான நிஜாம் ஏரியாவில் மட்டும் 2.0 படம் 23 கோடி ஷேர் கொடுத்துள்ளது. அந்த ஏரியாவில் மட்டும் வாங்கிய தொகைக்கும் அதிகமான ஷேர் கிடைத்து படம் லாபத்தைக் கொடுத்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.