தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் |
தமிழ் சினிமாவின் முதல் பிரம்மாண்டமான திரைப்படம் என்ற பெயரைப் பெற்ற '2.0' படம் கடந்த நவம்பர் 29ம் தேதி வெளியானது. பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் இந்தப் படம் வெளியாகாததால் தமிழ்நாட்டில் எதிர்பார்த்த வசூலைப் பெற முடியவில்லை. ஹிந்தியில் மட்டுமே இந்தப் படம் 200 கோடி ரூபாய் வசூலைப் பெற்று சாதனை புரிந்துள்ளது.
தெலுங்கிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், படம் வாங்கப்பட்ட விலை அதிகம் என்பதால் ஒரு ஏரியாவைத் தவிர மற்ற ஏரியாக்களில் நஷ்டம் வரும் என்கிறார்கள். 72 கோடி ரூபாய் கொடுத்து வாங்கப்பட்ட இந்தப் படம் இதுவரையில் 52 கோடி ரூபாயை ஷேர் ஆகத் தந்துள்ளது. 72 கோடி ரூபாயை வசூலிக்க இன்னும் 20 கோடி தேவை. ஆனால், மூன்று வாரங்கள் ஆகிவிட்டதால் படத்தின் வசூல் தற்போது குறைந்துவிட்டது. அதனால், பாக்கித் தொகையான 20 கோடி வசூலிக்க வாய்ப்பில்லை.
தெலுங்கின் முக்கிய ஏரியாவான நிஜாம் ஏரியாவில் மட்டும் 2.0 படம் 23 கோடி ஷேர் கொடுத்துள்ளது. அந்த ஏரியாவில் மட்டும் வாங்கிய தொகைக்கும் அதிகமான ஷேர் கிடைத்து படம் லாபத்தைக் கொடுத்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.