ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனைமரத்தில் நெறிகட்டுமா என கேட்பதுண்டு.. அதை மெய்ப்பிப்பது போல வேன் உரிமையாளர் சங்கம் நடத்திய ஸ்ட்ரைக்கானது பிரபல பாலிவுட் நடிகரான அக்சய் குமாரை இயற்கை உபாதையை கழிக்க இடம் தேடி அலையவைத்து, ரொம்பவே அவஸ்தை படுத்தி விட்டது.
ஆம்.. அக்சய் குமார் தற்போது, 'கேசரி' என்கிற படத்தில் நடித்து வருகிறார். மகாராஷ்டிர மாநில அரசு திடீரென வாகன வரியை, மற்ற மாநிலங்களை விட பல மடங்கு உயர்த்தியதை எதிர்த்து அனைத்து வேன் உரிமையாளர் சங்கங்களும் ஒன்றாக இணைந்து ஸ்ட்ரைக் அறிவித்தனர். அதனால் அக்சய் குமார் நடிக்கும் 'கேசரி' படத்தின் படப்பிடிப்புக்கு வரவேண்டிய கேரவன் வரவில்லை.
படப்பிடிப்பு ஒய்வு நேரத்தில் காற்றாட வெளியே உட்கார்ந்துகொண்ட, அக்சய் குமார், இயற்கை உபாதையை கழிக்க கேரவன் இல்லாததால் ரொம்பவே அவஸ்தைப்பட்டு விட்டாராம். வெளிப்புற படப்பிடிப்பு என்பதால் மேக்கப் ரூமை உருவாக்கியவர்கள், கழிப்பறையை உருவாக்கவில்லை.. பின் படக்குழுவில் உள்ளவர்கள் சற்று தொலைவில் உள்ள ஸ்டுடியோ ஒன்றுக்கு அக்சய் குமாரை அழைத்து சென்று இயற்கை உபாதையை கழிக்க அவருக்கு ஏற்பாடு செய்து தந்தார்களாம்.