பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இளம் மலையாள நடிகர் துல்கர் சல்மான். ஓகே கண்மணி, வாயை மூடி பேசவும், நடிகையர் திலகம், உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். தற்போது இந்திப் படங்களில் நடித்து வருகிறார். இதற்காக அவர் தற்போது மும்பையில் தங்கியிருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு துல்கர் சல்மான் கார் ஓட்டிக்கொண்டே செல்போனில் வீடியோ பார்ப்பது போன்ற வீடியோ ஒன்று வெளியானது. இது இணையத்தில் வைரல் ஆனது.
இந்த வீடியோவை மும்பை போலீசார் தங்கள் இணைய தளத்தில் வெளியிட்டு. "இது தவறானது. இதுபோன்று யாரும் செய்யாதீர்கள் உயிருக்கு ஆபத்தாக முடியும். பிரபலமான ஒருவரே இப்படி செய்யலாமா?" என்று குறிப்பிட்டிருந்தனர்.
இதற்கு பதில் அளித்த துல்கர் சல்மான். "அது படப்பிடிப்பு காட்சி. காரை ஓட்டவில்லை. அது டிரக்கில் கட்டப்பட்டிருந்தது. நான் நினைத்தாலும் காரை ஓட்ட முடியாது. ஷாட் இல்லாத இடைவெளியில் செல்போனை பார்த்தேன்" என்று விளக்கம் அளித்தார்.
இந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்ட மும்பை போலீஸ் துல்கரிடம் தனிப்பட்ட முறையில் வருத்தம் தெரிவித்துக் கொண்டது.