ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
தமிழில் வீணை எஸ்.பாலச்சந்தர் திகில் படங்கள் எடுத்து பிரபலமானவர். அவரைப்போன்றே ஹிந்தியில் திகில் படங்கள் எடுத்து திகில் பட மன்னன் என்று புகழப்பட்டவர் துளசி ராம்சே. 80களில் இவர் எடுத்த திகில் படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட வைத்தது. ஹோட்டல் புரானா, மந்திர், தக்கானா, வீரானா, பந்த் தர்வாஸா, போன்றவை முக்கியமான படங்கள்.
முதுமை காரணமாக சினிமா விட்டு விலக்கிய துளசி ராம்சே, மும்பை அந்தேரி பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவருக்கு வயது 77. துளசி ராம்சே உடலுக்கு இந்தி திரையுலகினர் அஞ்சலி செலுத்தினார்கள்.