'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரேமம் படத்தில் பிரபலமான சாய் பல்லவி, தமிழில் தியா படத்தில் அறிமுகமானார். தெலுங்கில் காதல் மற்றும் காமெடி கலந்த கதைகளில் நடித்திருக்கிறார். தற்போது தமிழில், தனுஷின் மாரி-2 படத்தில் அராத்து ஆனந்தி என்றொரு ஆட்டோ ஓட்டும் பெண்ணாக நடித்திருப்பவர், சூர்யாவின் என்ஜிகே படத்தில் ஒரு வித்தியாசமான ரோலில் நடித்துள்ளார்.
தெலுங்கில் ராணா போலீஸ் வேடத்தில் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் சாய் பல்லவி. வேணு உடுகுலா இயக்கும் இந்த படத்தில், சாய் பல்லவி நக்சலைட்டாக நடிக்கிறாராம். நக்சலைட்டு வேட்டையில் ஈடுபடும் போலீஸ் ராணாவுக்கும், சாய் பல்லவிக்கும் காதல் உருவாகி, பின்னர் அதன் விளைவுகளை சொல்லும் வகையில், இந்த படத்தின் கதை உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது.