டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் நடித்து வந்தவர் பாலசரவணன். அதையடுத்து குட்டிப்புலி படத்தில் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், டார்லிங் என பல படங்களில் நடித்து வேகமாக வளர்ந்து கொண்டிருந்த பாலசரவணனை, சமீபகாலமாக அதிகமான படங்களில் பார்க்க முடியவில்லை.
இதற்கு காரணம், விஜய்க்கே என்னிடம் நல்ல கதை உள்ளது என்று ஒரு பேட்டியில் தெரிவித்த பால சரவணன், அதையடுத்து இயக்குநராக தயாராகி விட்டதாக செய்திகள் வெளியாகின. விளைவு, அவருக்கான படவாய்ப்புகள் குறைந்தன.
தற்போது ஓரிரு படங்களில் மட்டுமே நடித்து வரும் பாலசரவணன், சினிமா விழாக்களில் பேசும்போது, அங்கு வந்திருக்கும் முன்னணி டைரக்டர்கள் மற்றும் நடிகர்களிடம் தனக்கு படங்களில் நடிக்க வாய்ப்புத்தருமாறு நேரடியாகவே கேட்டு வருகிறார்.