இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
ஏசியா நெட்டில் ஒளிபரப்பான பரஸ்பரம் என்ற தொடரில் நடித்து புகழ்பெற்றவர் காயத்ரி அருண். தற்போதும் பல தொடர்களில் நடித்து வருகிறார். காயத்ரி அருண் சமூக வலைத்தளங்களிலும் பிசியாக இயங்கிக் கொண்டிருக்கிறார். கடந்த சில தினங்களாக அவரது பேஸ்புக் முகவரியில் ஒருவர் தினமும் ஆபாச செய்திகள் அனுப்பி வந்துள்ளார். இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்தார் காயத்திரி.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர், "நீங்கள் ஒரு நாள் இரவு என்னுடன் தங்கினால் 2 லட்சம் ரூபாய் தருகிறேன். ஒரு மணி நேரம் தங்கினாலும் போதும்" என்று தகவல் அனுப்பி உள்ளார். இதற்கு குணமா பதில் சொல்லியிருக்கிறார் காயத்ரி அருண்.
அவர் கூறியிருப்பதாவது: உங்கள் தாய், மற்றும் சகோதரிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நான் ஆண்டவனிடம் பிரார்த்திக்கும்போது கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
"நீயெல்லாம் அக்கா தங்கச்சியோட பிறக்கலையா?" என்பதையே இப்படி நாகரீகமாக வெளிப்படுத்தியிருக்கிறார். இதனை தனது பேஸ்புக்கிலும் வெளியிட்டிருக்கிறார் காயத்ரி அருண்.