‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பிரபல கன்னட நடிகை ஸ்ருதி ஹரிகரன். இவர் தமிழ் கன்னடம் இரு மொழிகளில் தயாரான நிபுணன் என்ற படத்தில் நடித்தபோது உடன் நடித்த நடிகர் அர்ஜுன், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மீ டூ புகார் கூறினார். இதுகுறித்து போலீசிலும் புகார் கொடுத்தார். இதனால் அர்ஜுன், இவர் மீது 5 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். ஸ்ருதி ஹரிகரனும் அர்ஜூன் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த பிரச்னைக்கு பிறகு ஸ்ருதி ஹரிகரனுக்கு சினிமா வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட படங்களில் இருந்தும் நீக்கப்பட்டு விட்டார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
நான், மீ டூ புகார் கூறுவதற்கு முன்பு வாரத்திற்கு 2 பட வாய்ப்புகளாவது வரும், இப்போது வருவதில்லை. காரணம் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தங்கள் படத்திற்கு என்னை தேர்வு செய்ய தயங்குகிறார்கள். கன்னடத்தில் மட்டுமல்ல தென்னிந்திய சினிமாவிலேயே மீ டூ புகார் கூறினால் இதுதான் நிலைமை. இதற்காக நான் கவலைப்பட்டாலும் சோர்ந்து விடவில்லை. நான் இந்த நிலைக்கு வந்ததற்கும், இதற்கு பிறகும் சினிமாவில் நீடிப்பதற்கும் எனது நேர்மையே காரணம். தொடர்ந்து, தன்னம்பிக்கையுடன் போராடுவேன், ஜெயிப்பேன்.
இவ்வாறு ஸ்ருதி கூறியிருக்கிறார்.