இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
மறைந்த முன்னாள் முதல்வரும், நடிகையுமான ஜெயலலிதாவின் வாழ்க்கையை பலரும் திரைப்படமாக எடுக்க முயற்சித்து வருகிறார்கள். ஏற்கெனவே கன்னடத்தில் அம்மா என்ற பெயரில் அவரது கதை படமாக்கப்பட்டது. அதன் மீது வழக்கு தொடரப்பட்டதால் அந்தப் படம் வெளிவரவில்லை.
பாரதிராஜாவும், லிங்குசாமியும் இயக்கப்போவதாக சொன்னார்கள். தற்போது பிரியதர்ஷினி என்ற பெண் இயக்குனர், ஐயர்ன் லேடி என்ற பெயரில் ஜெயலலிதா கதையை படமாக்குவதாகவும், அதில், நித்யா மேனன் ஜெயலலிதாவாக நடிக்க இருப்பதாக அறிவித்து, அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டார்.
இந்த நிலையில் இயக்குனர் ஏ.எல்.விஜய் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்குவதில் தீவிரம் காட்டுவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. முதல் கட்டடமாக அவர் திரைக்கதையை எழுதி முடித்து, அதனை ஜெயலலிதா தொடர்புடையவர்களிடம் காட்டி ஒப்புதல் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அடுத்த கட்டமாக நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருவதாக சொல்கிறார்கள். ஜெயலலிதாவாக நடிக்க வித்யாபாலனும், எம்.ஜி.ஆராக நடிக்க அரவிந்த்சாமியும் ஒப்பந்தம் செய்யப்படலாம் என்று தெரிகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது.
இதற்கான முறையான அறிவிப்பை ஜெயலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24ந் தேதி பிரமாண்ட விழா நடத்தி அறிவிக்க விஜய் ஏற்பாடு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. படத்திற்கு அம்மா என்றால் அன்பு என்று டைட்டில் வைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா பாடிய முதல் பாடலின் முதல் வரிகள் இது. இதுவே அவரது வாழ்க்கைக்கும் பொருத்தமாக இருப்பதால் இந்த தலைப்புக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு வருடம் வரை படத்தின் பணிகள் செய்யப்பட்டு, 2020 பிப்ரவரி 24 ந் தேதி ஜெயலலிதா பிறந்த நாளில் படத்தை திரையிட திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.