ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய சர்கார் படம், தீபாவளி அன்று வெளியானது. அந்தப்படத்தில் அரசின் இலவச திட்டங்கள் குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தது. இது ஆளும் கட்சியை கோப்படுத்தியது. சர்கார் படத்திற்கு எதிராக படம் திரையிடப்பட்ட தியேட்டர்கள் முன் ஆளும் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து சில காட்சிகள் நீக்கப்பட்டு படம் தொடர்ந்து திரையிடப்பட்டது.
இந்த நிலையில் சென்னை எழும்பூரைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் சர்கார் படத்தில் அரசின் இலவச திட்டங்களை விமர்சித்து அரசுக்கும், மக்களுக்கும் அவதூறை ஏற்படுத்தியிருக்கிறார்கள். எனவே இயக்குனர் முருகதாஸ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய குற்றப் பிரிவு போலீசில் புகார் செய்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் தான் கைது செய்யப்படலாம் என்று கருதிய முருகதாஸ், உயர்நீதி மன்றத்தின் மூலம் முன் ஜாமீன் பெற்றார். முன் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது "ஏ.ஆர்.முருதாஸ் சர்கார் படத்திற்காக மன்னிப்பு கேட்பதோடு, இனி அப்படி விமர்சிக்க மாட்டேன் என்று உறுதி அளித்தால் வழக்கை இத்துடன் முடித்துக் கொள்வதாக" அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். அதற்கு முருகதாஸ் மறுத்து விட்டார்.
இந்த நிலையில் மத்திய குற்றப் பிரிவு போலீசார் ஏ.ஆர்.முருகதாஸ் மீது நேற்று வழக்கு பதிவு செய்தனர். அரசுக்கு எதிராக மக்களை தூண்டியதாக 3 பிரிவுகளின் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் முன் ஜாமீன் பெற்றிருப்பதால் இந்த வழக்கில் அவரை கைது செய்ய முடியாது. வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்று தெரிகிறது.