இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்த '2.0' படம் ஹிந்தியில் டப்பிங் ஆகி வட இந்தியாவில் வெளியானது. தமிழ்நாட்டைவிட ஹிந்தி பேசும் மாநிலங்களில் இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதனால், ஒரு வாரத்திற்கு முன்னதாக ஐந்தே நாட்களில் விரைவாக 100 கோடி வசூலைக் கடந்த 2.0 படம் தற்போது 150 கோடியைக் கடந்துள்ளது.
அமிதாப்பச்சன், ஆமீர்கான் ஆகியோர் நடித்த நேரடி ஹிந்திப் படமான 'தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்' வசூலையும் '2.0' வசூல் தொகை கடந்துவிட்டது. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் 2.0 படத்தின் வசூல் வார நாட்களை விட அதிகமாகியுள்ளது. இன்னும் ஒரு வாரம் ஓடினால் ஹிந்தியில் மட்டுமே இந்தப் படம் 200 கோடி ரூபாய் வசூலைக் கடக்கும் என்கிறார்கள்.
அக்ஷய் குமார் படத்தில் இருந்ததால் இது சாத்தியமானது என்ற குரலும் எழாமல் இல்லை. இருப்பினும் ஒரு தமிழ்ப் படம் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு முதன்முதலாக 150 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியது சாதாரண விஷயமல்ல. ஆனாலும், 'பாகுபலி 2' படத்தின் வசூலை '2.0' படம் முறியடிக்க முடியாமல் போனது ரஜினி ரசிகர்களுக்கு வருத்தமான ஒரு விஷயம்தான்.