பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
டைரக்டர் மணிரத்னம் தனது கனவு படமான பொன்னியின் செல்வன் கதையை படமாக்கப்போவதாக நீண்டகாலமாக சொல்லிக்கொண்டு வருகிறார். இந்நிலையில், செக்கச்சிவந்த வானம் படத்தை அடுத்து மீண்டும் அவர் ஒரு மல்டி ஹீரோ படத்தை இயக்கயிருப்பதாகவும், அது பொன்னியின் செல்வன் கதை என்றும் கூறப்பட்டது. அதோடு அந்த படத்தில் விஜய், விக்ரம், சிம்பு ஆகியோர் நடிப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
ஆனால் தற்போது அந்த செய்திகள்அனைத்தையும் பொய்யாக்கும் வகையில், தான் இயக்கிய ராவணன் படத்தில் நடித்த சீயான் விக்ரமை வைத்து பொன்னியின் செல்வன் கதையை படமாக்க மணிரத்னம் முடிவெடுத்திருப்பதாக தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. விக்ரம் லீடு ரோலில் நடிக்க அவருடன் வேறு சில நடிகர்களும் நடிக்கிறார்களாம். விரைவில் இந்த படத்திற்கான வேலைகள் தொடங்கயிருப்பதாக கூறப்படுகிறது.