தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தாரணி டாக்கீஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கே.துரை வசந்த் இயக்ககும் படம் 'உன்னை பாக்காமலே'. இதில் ஹீரோவாக புதுமுகம் அருண் ஹாசன் நடிக்கிறார். ஹீரோயின்களாக சுகன்யா, செளந்தர்யா ஆகியோர் அறிமுகமாகிறார்கள்.விக்ரம் செல்வா இசையமைக்கும் இப்படத்திற்கு தங்கபாண்டியன் ஒளிப்பதிவு செய்கிறார். படம் பற்றி இயக்குனர் கே.துரை வசந்த் கூறியதாவது:
சிட்டி மற்றும் வில்லேஜ் என இரண்டு கதைக்களங்களிலும் உருவாகும் இப்படத்தின் கதை முக்கோண காதல் காதையாகும். சிட்டியில் வாழும் ஹீரோயின், மன அமைதிக்காக கிராமம் ஒன்றுக்கு செல்கிறார். அங்கிருக்கும் ஹீரோ மீது அவர் காதல் வயப்படுகிறார். அதே சமயம், அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு பெண்ணும் ஹீரோவை ஒரு தலையாக காதலிக்கிறார். யாருடைய காதல் உண்மையானது என்பதை சொல்லும் திரைக்கதை, இளைஞர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மூணாறு, மறையூர், தென்காசி ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. என்றார்.