இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கஜா புயலினால் தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில் இயல்பு நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான வீடுகள் முழுவதுமாக சேதமடைந்துள்ளன. தார்பாய்களைக் கொண்ட்டு தற்காலிகமாக மழையிலிருந்து ஒதுங்கிக் நிற்கின்றனர். இந்த பகுதி மக்களுக்கு ஏராளமான பேர் உதவி வருகின்றனர்.
ரஜினி சார்பில், ரஜினி மக்கள் மன்றத்தினர், தலைமை அலுவலகத்திலிருந்து 50 லட்சம் ரூபாய் அளவிலும், தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் லட்சக்கணக்கான ரூபாய் பெருமானம் உள்ள பொருட்களை நேரடியாக வினியோகித்து வருகிறார்கள். எவ்வளவோ தேவைகள் இருந்தாலும், இருட்டில் மக்கள் அவசரத்திற்காக வெளியே செல்வதற்கு உதவியாக டார்ச் லைட்டுகள் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று பேராவூரணி நாடியம் கிராமத்தைச் சார்ந்த சமூக ஆர்வலர் கோவிந்த் நீலகண்டன் முயற்சிகள் எடுத்துள்ளார்.
இதை அறிந்த அமெரிக்க ரஜினி ரசிகர்கள் உதவ முன்வந்தனர். வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை மற்றும் க்ரேட் ரஜினி பேன்ஸ், யு.எஸ்.ஏ அமைப்புகளைச் சார்ந்த ரசிகர்கள், 1000 அமெரிக்க டாலர்கள் நிதியுதவி செய்து, 1000 குடும்பங்களுக்கு பேட்டரிகளுடன் கூடிய டார்ச்லைட்கள் வழங்கி உள்ளனர். சமூக ஆர்வலர் நாடியம் கோவிந்த்.நீலகண்டன் நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்ட மக்களிடம் வினியோகித்துள்ளார்.