சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
தயாரிப்பாளர் சங்கத்தின் படவெளியீடு கட்டுப்பாட்டுக் குழுவின் பேச்சை மீறி மாரி-2 படத்தை வெளியிடுவதால் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் தனுஷ் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.
ஜெயம் ரவி நடித்துள்ள அடங்க மறு, சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள கனா, விஜய்சேதுபதி நடித்துள்ள சீதக்காதி, விஷ்ணு விஷால் நடித்துள்ள 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' ஆகிய படங்கள் டிசம்பர் 21-ம் தேதி வெளியாக இருக்கின்றன. இப்படங்களின் வெளியீட்டை உறுதிப்படுத்தியுள்ள நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக மாரி 2 படமும் டிசம்பர் 21-ம் தேதி வெளியீடு என்று தனுஷ் தரப்பில் தன்னிச்சையாக அறிவிக்கப்பட்டது.
இதனால், மற்ற படங்களின் தயாரிப்பாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதனைத்தொடர்ந்து, 5 படங்களின் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் ஆகியோருடன் தயாரிப்பாளர் சங்கம் நடத்திய கூட்டத்தில் சுமுகமான தீர்வு ஏற்படவில்லை. இதனால், டிசம்பர் 21-ம் தேதி வெளியீட்டில் என்ன பிரச்சினை நடந்தாலும், அதில் தயாரிப்பாளர் சங்கம் தலையிடுவதில்லை என்று முடிவெடுத்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே நேற்று டிச., 21 மற்றும் பொங்கல் பண்டிகைகளில் தயாரிப்பாளர்கள் தங்கள் விருப்பம் போல் படத்தை வெளியிட்டு கொள்ளலாம் என அறிவித்தனர்.
அதேசமயம், டிசம்பர் 21ம் தேதி 5 படங்களுக்கு எப்படி திரையரங்குகள் ஒதுக்குவது என்ற அதிருப்தியை திரையரங்க உரிமையாளர்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள். ஏற்கனவே 4 படங்கள் வரும்போது மாரி-2 படத்தை அதே தேதியில் கொண்டுவர தனுஷ் உறுதியாக இருந்தது ஏன்?
காலா படம் ரிலீஸ் தொடர்பாக இதே தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஏற்பட்ட மனகசப்பு, இந்த தேதியில் ரிலீஸ் பண்ணினால் அடுத்தடுத்து தொடர் விடுமுறை வருவதால் பணத்தை அள்ளலாம் என்ற மனநிலை, பொங்கலுக்கு ரஜினி, அஜித் படங்கள் வருதால் அந்தமாதமும் தியேட்டர் கிடைக்காது என்பதாலும், எல்லாவற்றுக்கும் மேலாக சிவகார்த்திகேயன் முதன்முதலாக தன்னுடைய பெயரில் தயாரித்துள்ள கனா படத்துக்கு போட்டியாக களமிறங்க வேண்டும் என்ற நிலைப்பாடு ஆகியவையே மாரி-2 படத்தை களத்தில் இறக்க காரணம் என்கிறார்கள்.