ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.0 படம், உலகம் முழுக்க 500 கோடி வசூல் செய்திருப்பதாக லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. படம் வெளியான 6 நாட்களில் சென்னையில் மட்டும் சுமார் 13 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழைவிட தெலுங்கு ஹிந்தியில் 2.0 படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக சொல்லப்படும் அதே நேரம், அங்கும் சுமாரான வரவேற்பே பெற்றுள்ளது என்ற தகவலும் அடிபடுகிறது. இதற்கிடையில் சென்னையில் பல திரையரங்குகளில் 3டி தொழில்நுட்பத்திலேயே திரையிடப்பட்டுள்ளதால் 2.0 படம் நல்ல வசூல் செய்து வருகிறது.
2.0 படம் வெளியான நவம்பர் 29-ம் தேதி முதல் 6 நாட்களில் சென்னையில் மட்டும் 13 கோடியைக் கடந்து வசூல் செய்துள்ளது. இதன் அடிப்படையில் 2.0 படம் பாகுபலி 2 படத்தின் சென்னை வசூலை முறியடிக்கும் என்று திரையரங்க உரிமையாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
சென்னையில் 2.0 வசூல் சாதனை புரிந்தாலும், தமிழகத்தில் உள்ள பி மற்றும் சி சென்டர்களில் 2டியில் திரையிடப்பட்ட தியேட்டர்களில் மக்களிடம் வரவேற்பில்லை. 2.0 படத்தை 3டியில் காணவே மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், 2டியில் திரையிட்ட பல தியேட்டர்களில் வசூல் மந்தமாக இருப்பதாக சொல்கின்றனர்.