ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க வெளியீட்டுக் குழுவின் அனுமதி இல்லாமல் தன்னுடைய மாரி 2 படத்தை டிசம்பர் 21ம் தேதி வெளியிடப் போவதாக தனுஷ் அறிவித்துள்ளார். ஆனால், ஏற்கெனவே தயாரிப்பாளர் சங்கம் சில படங்களுக்கு அன்றைய தினத்தில் படத்தை வெளியிட அனுமதி அளித்திருந்தது. 'அடங்க மறு, பூமராங்க, கனா, சீதக்காதி, சிலுக்குவார்பட்டி சிங்கம்' ஆகிய படங்கள் அன்று வெளியாக உள்ளன. அந்தப் படங்களுக்கே தியேட்டர்கள் சரியாக கிடைக்குமா என்பது தெரியாத நிலையில் இப்போது 'மாரி 2' படமும் சேர்ந்து கொண்டுள்ளது.
இந்த போட்டியில் திரையுலகத்தில் இரண்டு படங்களின் மோதல்தான் அதிகமாகப் பார்க்கபடுகிறது. டிவியில் தொகுப்பாளராக இருந்து தனுஷ் மூலம் நடிகராக அறிமுகமாகி, இன்று முன்னணி நாயகனாக உயர்ந்து நிற்கும் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள 'கனா' படமும், தனுஷ் தயாரித்து நடித்துள்ள 'மாரி 2' படமும் டிசம்பர் 21 அன்று போட்டி போட உள்ளன.
தயாரிப்பாளராக தான் தயாரித்துள்ள முதல் படமான 'கனா' படம், தனுஷின் 'மாரி 2' படத்துடன் மோதும் சூழ்நிலை வரும் என சிவகார்த்திகேயன் எதிர்பார்த்திருக்க மாட்டார். இந்த போட்டியின் முடிவு எப்படி இருக்கப் போகிறது என்பது இரண்டு வாரங்களில் தெரிந்துவிடும்.