‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் நாயகனாக நடித்தவர் துல்கர்சல்மான். இந்த படம் தெலுங்கில் ஓகே பெங்காரம் என்ற பெயரில் வெளியானது. அதன்பிறகு சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவான மகாநதி படத்தில் ஜெமினி கணேசனாக நடித்தார் துல்கர் சல்மான். இதனால் தற்போது அவர் தெலுங்கு ரசிகர்களுக்கும் நன்கு பரிட்சயமான நடிகராகி விட்டார்.
இந்த நிலையில், தற்போது தெலுங்கில் மோகன் கிருஷ்ணா இயக்கத்தில் தில்ராஜூ தயாரிக்கும் ஒரு இரண்டு ஹீரோ கதையில் நானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தில் இன்னொரு ஹீரோ வேடத்தில் நடிக்க துல்கர் சல்மானை ஒப்பந்தம் செய்துள்ளனர். ஆனால் அவர் மலையாளம், ஹிந்தி படங்களில் பிசியாக இருப்பதால் துல்கர் சல்மானுக்காக காத்திருக்கிறார் நானி.