'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
உலக அளவில் டுவிட்டரில் செல்வாக்குள்ள நபர்களில் இந்தியாவைச் சேர்ந்த இரு பிரபலங்களின் பெயர் இடம் பெற்றுள்ளது. இது இந்தியர்களுக்கு கிடைத்த கவுரவம் என கூறப்படுகிறது.
சமூக ஊடக ஆய்வு நிறுவனமான ப்ராண்ட் வாச் நிறுவனம் சமீபத்தில் உலக அளவில், டுவிட்டரில், 2018ம் ஆண்டுக்கான செல்வாக்கு மிக்க நபர்கள் யார் என்பதை அறிவதற்கான ஆய்வை நடத்தியது. ஆய்வுக்குப் பின், செல்வாக்கு மிகுந்த 10 ஆண்கள் மற்றும் 10 பெண்களை வரிசைப்படுத்தி பட்டியல் வெளியிட்டுள்ளது.
இதில் இங்கிலாந்தைச் செர்ந்த பாடகர் லியாம் பெய்ன் முதல் இடத்தையும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளனர். எட்டாவது இடத்தை, இந்தியாவைச் சேர்ந்த பிரபல நடிகர் அமிதாபச்சனும், பத்தாவது இடத்தை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் பெற்றுள்ளனர்.
இந்தத் தகவல் குறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ஏ.ஆர்.ரகுமான், 'இந்த ஆய்வு முடிவு என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது' என குறிப்பிட்டுள்ளார்.