'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மகாபாரத கர்ணனை மையப்படுத்தி, மலையாள இயக்குனர் ஆர்.எஸ்.விமல் என்பவர் இயக்கும் படம் 'மஹாவீர் கர்ணா'. விக்ரம் 'கர்ணன்' ஆக நடிக்கும் இந்தப்படம் சுமார் 3௦௦ கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகிறது. யுனைடெட் பிலிம் கிங்டம் நியூயார்க் என்கிற நிறுவனம் தயாரிக்கிறது.
ஹிந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளில் இந்தப்படம் வெளியாக இருந்தாலும், முதலில் ஹிந்தியில் தான் இதன் படப்பிடிப்பை நடத்துகின்றனர். பின்னர், 32 மொழிகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருக்கிறதாம்.
கடந்த ஏப்ரல் மாதம் இயக்குனர் ஆர்.எஸ்.விமல், படத்தின் கதையை சபரிமலைக்கு சென்று வழிபட்டு வந்தார். இந்தநிலையில் திருவனந்தபுரம் பத்மநாபா கோவிலுக்கு சிறப்பு பூஜைக்காக சென்றனர் மகாவீர் கர்ணா படக்குழுவினர். அங்கே அவர்களிடம் கோவிலில் வைத்து பூஜிக்கப்பட்ட மிகப்பெரிய மணி ஒன்று வழங்கப்பட்டது.
இந்த மணி, படத்தில் விக்ரம் வசம் இருக்கும் 3௦ அடி தேரில் ஒரு அங்கமாக இடம்பெற உள்ளதாம். இந்த பூஜையில் நடிகரும் ராஜ்யசபா எம்.பி.யுமான சுரேஷ்கோபியும் நட்புரீதியாக கலந்துகொண்டு மணியை பெற்றுக்கொண்டார். வரும் ஜனவரியில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.