ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் ராதாரவி தன்னுடைய பெயருக்கு முன் டத்தோ என போட்டுக் கொள்கிறார். அப்படியொரு பட்டத்தை அவருக்குக் கொடுக்கவே இல்லை என, சம்பந்தப்பட்டவர்கள் எனக்கு கடிதம் மூலமாக கூறியுள்ளனர் என, பாடகி சின்மயி, நடிகர் ராதாரவியை கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதற்கு பதில் அளித்து, நடிகர் ராதாரவி கூறியிருப்பதாவது : சின்மயி எல்லா விஷங்களிலும் பொய் பேசக் கூடியவர் என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறார். அது, அவருக்கு வாடிக்கையாகி விட்டது. கவிஞர் வைரமுத்துவை பிளாக் மெயில் செய்யும் நோக்கோடு, அவர் மீது பொய்யான புகாரை கூறினார். அடுத்ததாக என்னிடம் வந்திருக்கிறார். என்னிடம் கொடுப்பதற்கு எதுவுமே இல்லை; உண்மை மட்டும்தான் இருக்கிறது. அதனால், அவரை சும்மா விட மாட்டேன்.
மலேசியாவில் டத்தோ பட்டத்தை யார் வழங்குகின்றனர் என்ற விவரம் கூட அவருக்குத் தெரியவில்லை. நான் பட்டம் பெற்றதற்கான எல்லா ஆதாரங்களும் என்னிடம் இருக்கின்றன. தற்போது நான் வெளியூரில் இருக்கிறேன். சென்னை திரும்பியதும், அதற்கான ஆதாரங்களை வெளியிட இருக்கிறேன். எனக்கு யார் பட்டம் தந்தனரோ, அவர்களே, சின்மயி மீது சட்டப்பூர்மான நடவடிக்கையில் இறங்குவர். சின்மயியின் பித்தலாட்டத்தை, வெளிச்சம் போட்டுக் காண்பிப்பேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.